கௌதமாலாவில் பீஜோ எரிமலை வெடிப்புக்குள்ளாகியுள்ளது. குறித்த பகுதியிலிருந்து சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. கௌதமாலாவில் எண்டிகுவா நகரிலுள்ள எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை புகை மற்றும் சாம்பலை வெளியிட தொடங்கியது. இந்நிலையில் தற்போது லாவா குழம்பு வெளியாகிவருவதாக கௌதமாலா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன