எலிக்காய்ச்சல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். பொல்பிதிகம, ரிதிகம மற்றும் மஹவ பகுதிகளில் மேலும் 187 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சுகாதார சேவை பரிசோதகர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகளுக்கமைய செயற்பட்டால், எலிக்காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களை தெளிவுபடுத்தியுள்ளனர்.