ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சர்வகட்சி சந்திப்பொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளையும் இதில் பங்கேற்குமாறு அவர் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 05.00 மணிக்கு ஜனாதிபதி காரியாலயத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. பாராளுமன்றத்தில் கடந்த சில தினங்களில் ஏற்பட்ட அரசியல் அமைதியற்ற சூழல் மற்றும் மோதல் நிலைமைகளை நிறைவுக்கு கொண்டுவந்து, பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு சகல அரசியல் கட்சிகளிடமும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவே இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு சபநாயகர் கரு ஜயசூரியவையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.