அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் “GAJA” சூறாவளி வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 700 கி.மீதூரத்தில் நிலை கொண்டு மேற்கு-தென்மேற்குதிசையில் நகர்ந்து பாரிய சூறாவளியாக மாறக்கூடிய சாதத்தியம் காணப்படுகின்றது. மீனவர்கள் பொத்துவிலிலிருந்து திருகோணமலை – காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடலில் மீன்பிடிநடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள். முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது