அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ ஓரளவு கட்டுப்பாட்டிறகுள் கொண்டுவரப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் வட பகுதியில் 30 வீதமான பகுதியில் தீ அணைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் தீவிரமாக போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இப்பகுதியில் 1 இலட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் காணிகள் காட்டுத் தீயினால் பாதிப்படைந்துள்ளது. இம்மாத்திற்குள் இக்காட்டுத்தீ முற்றாக கட்டுப்படுத்தப்படும் என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.காணாமல் போனோரை தேடும் பணிகள் மேலும் தொடர்கின்றன. இக்காட்டுத்தீயில் சிக்கி நேற்று வரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.