சபரிமலை ஐயப்பன் ஆலயம், மத சார்பற்றதென கேரள அரசாங்கம் அறிவித்துள்ளது. எந்தவொரு மதத்தினரும் ஆலயத்திற்கு செல்லமுடியும். ஏனைய மதத்தவர்கள் சபரிமலைக்கு வருவதை தடைசெய்யவேண்டுமென அண்மையில் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த மனுவை நிராகரிக்க வேண்டுமென கேரள அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சபரிமலை ஆலயம் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களின் வரலாற்றுடனும் தொடர்புபட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது