கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொட நுழைவாயிலில் இருந்து களனி பாலம் வரையான பகுதி இன்று முதல் மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த போக்குவரத்து ஒழுங்கு கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பயணத்தை எந்தவகையிலும் பாதிக்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.