அந்தமான் தீவுகளுக்கருகே வங்காள கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் இன்றைய தினம் மேலும் வலுவடைந்து, புயலாக உருவெடுப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. அதற்கமைய நாளை மாலை அல்லது இரவு வேளையில் குறித்த தாழமுக்க நிலை சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் காணப்படுகிறது. இதனால் நாளை மறுதினம் முதல் வங்காள விரிவுகுடாவில் மேற்கு, மத்திய மற்றும் தென்மேற்கு கடற்பிராந்தியங்களில் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்திணைக்களம் தெரிவிக்கிறது. இதனால் இன்று முதல் எதிர்வரும் 13ம் திகதி வரை வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தின் மத்திய, தென்கிழக்கு திசையில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.