மாணிக்கக் கல் மற்றும் ஆபரண துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாணிக்கக்கல் மற்றும் ஆபரண துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
கடந்மத மூன்றரை வருடங்களில் பல்வேறு தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்ட்ட போதும் இத்துறையில் இதுவரை தீரக்கப்படாத பிரச்சினைகளுக்கு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். இதற்காகவே அமைச்சரவையின் உபகுழு நியமிக்கப்படவுள்ளது. இத்துறையில் நீண்டகாலம் நிலவும் பிரச்சினைகளை தீரத்து வைக்கும் போது மிகவும் தளர்ச்சி போக்கிலான கொள்கைகளை பின்பற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி கூறினார். சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வோரை சுற்றிவளைத்தல் மற்றும் போலி ரத்தின கற்களை விற்பனை செய்வோரை கைது செய்தல் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கடந்த மூன்றரை வருடங்களில் இது போன்ற சுற்றி வளைப்புக்கள் தொடர்பான அற்pக்கையொன்றை அடுத்த வாரம் தனக்கு வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கினார். காணி மறு சீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளில் மாணிக்ககல் அகழ்வதற்கு அனுமதி வழங்குதல் வயல்காணிகளில் மாணிக்ககல் அகழ்தல். மாணிக்ககல் அகன்றதன் பின்னர் அக்குழிகளை மூடிவிடுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அரசாங்க அதிகாரிகள் பலரும் இச்சந்திப்பில கலந்து கொண்டனர்.