அமெரிக்காவுடன் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராக இல்லையெனவும், இதனால் பேச்சுவார்த்தை பிற்போடப்படுவதாகவும் வடகொரியா அறிவித்துள்ளது. இருநாட்டு பிரதிநிதிகளின் இணக்கப்பாட்டுடன் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் கூடிய விரைவில் பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானித்துள்ளதாக அமெரிக்க மற்றும் வடகொரிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.