எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவளிக்க தயாராகயிருப்பதாக பொதுநலவாய அமைப்பு உள்ளிட்ட நாடுகள் தயாராகவிருப்பதாக அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் திருமதி பெட்ரீசியா ஸ்கொட்லேண்ட் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14 ம் திகதி பாராளுமன்ற அமர்வுகளை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பொதுநலவாய அமைப்பின் செயலாளர் திருமதி பெட்ரீஸியா ஸ்கொட்லெண்ட் இவ்வாறு தெரிவித்தார். அரசியல் யாப்பு மற்றும் சட்டத்தின் சுயாதீன தன்மையை பாதுகாப்பதற்காக அரசியல் வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை ஒருநாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் அந்நாட்டின் தலைவர் மேற்கொண்ட தீர்மானங்களில் சர்வதேசம் தலையீடக்கூடாதென பிரிட்டிஸ் பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதி சபாநாயகரும் கென்ஷவேர்டிவ் கட்சியின் அரசியல் வாதியுமாக நேஷ்பி பிரபு தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளுக்கும் அரசியல் யாப்பு உள்ளது. இலங்கையில் தற்போது அசாதாரண நிலை ஏற்படவில்லை. பெரிய பிரித்தானியாவில் கூட இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நியாயமான காரணங்களால் இதனை செய்யலாம். ஒருநாட்டின் நிறைவேற்று ஜனாதிபதிக்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உள்ளது. இலங்கை ஜனாதிபதி மிகபுத்திசாலி ஆவார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரை நான் சந்தித்துள்ளேன். நாட்டின் நன்மைகக்காக அவர் புதிய பிரதமர் ஒன்றை நியமித்தார். ஒவ்வொரு நாட்டிற்கும் தனியான அரசியல் யாப்புக்கள் உள்ளதால் அந்நாடுகளில் ஏனைய நாடுகள் இதில் தலையிடக்கூடாது. நாங்கள் இலங்கையுடன் மிகவும் நெருங்கி செயற்படுகிறோம். இலங்கைக்கு எவ்வேளையிலும் நாங்கள் உதவத் தயார். நான் எந்தவொரு கட்சிக்கும் சார்பானவர் அல்ல. அதனால் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாமென நான் எனது சகோதர அரசியல் வாதிகளிடம் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.