மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதன் காரணமாக பல தாழ்நில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் இதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாநகர சபையின் அனர்த்த முன் ஆயத்த குழுவினரால் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள அனர்த்த அபாயத்தை குறைக்கும் வகையில் வெள்ள நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் கீழ் மாநகர முதல்வரின் வழிகாட்டலுக்கு அமைய மட்டக்களப்பு புதூர் இருதயபுரம் ஊரணி ஆகிய பகுதிகளில் வடிந்தோடும் வெள்ள நீரினை கட்டுப்படுத்தும் வகையில் வடிகான் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பெகோ இயந்திரம் கொண்டு தோண்டப்படும் வடிகான்களை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மாநகர சபை தொழிநுட்ப உத்தியோகத்தர் எஸ்.ராஜ்குமார் மாநகர சபையின் அனர்த்த முன் ஆயத்த குழு உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.