சுகாதார பாதுகாப்பின்றி உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்கள் 83 பேருக்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் நகர சபைக்குட்பட்ட பகுதியில் பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் இதுதொடர்பான சுற்றிவளைப்பை மேற்கொண்டார். சுமார் 150 க்கும் அதிக வர்த்தக நிலையங்கள் இதன்போது பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக நுவரெலிய மாவட்ட நிர்வாக பொதுசுகாதார பரிசோதகர் காமினி பெரேரா தெரிவித்தார்.