கொலையுடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹங்வெல்ல எம்புல்கமுவ பிரதேசத்திலுள்ள உணவகமொன்றின் உரிமையாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேக நபர்கள் 21, 23, 25 மற்றும் 36 வயதானவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.