ஹெரோயின் போதைப்பொருளுடன் 60 வயதான சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாழைத்தோட்டம் பகுதியில் சந்தேக நபரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து 2.5 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.