திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூட்டில் 21 வயதான நபரொருவர் காயமடைந்த நிலையில், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்ட நபர் இனங்காணப்பட்டுள்ளார். அவரை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.