அரசியல்வாதிகள் மாறும் போது நாட்டின் கல்விக்கொள்கை மாற்றமடையக்கூடாதென்று கல்வி உயர்கல்வி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கல்விக்கு அரசியலுக்கு அப்பால் தேசியக்கொள்கை வகுக்கப்படவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று காலை இசுறுபாய கல்வி அமைச்சில் மதவழிபாடுகளை தொடர்;ந்து தனது கடைமைகளை ஆரம்பித்தார்.
இந்த நிகழ்வில் கல்வி உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.