தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வாகன போக்குவரத்தை மணிக்கு 60 கிலோ மீற்றராக பேணுமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக விபத்துக்கள் இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார். வாகனங்களின் முன்பக்க விளக்கை ஒளிரவிடப்பட்ட வண்ணம் பயணிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் வாகனங்களுக்கிடையில் இடைவெளியை பேணுவது முக்கியமெனவும் அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் நடவடிக்கை பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடு