ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்றையதினம் இடம்பெறலாமென சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.