ஊருபொக்க பகுதியில் இடம்பெற்ற மனித படுகொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 20ம் திகதி ஊருபொக்க அக்குரஸ்ஸவத்த வலஸ்முல்ல பகுதியில் துப்பாக்கியொன்றால் சுடப்பட்டு நபரொருவர் கொலைசெய்யப்பட்டார். கொலைச் சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கி, ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபரை இன்று மொரவக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.