தீவிரவாத அச்சுறுத்தல் பாகிஸ்தானிலேயே அதிகளவில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிராந்திய போர்ஸ்சைட் குழு இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையிலேயே குறித்த விடயம் தெரயவந்துள்ளது. மனித இனத்திற்கான அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச பயங்கரவாதம் எனும் தலைப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சிரியாவை விட பாகிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் மூன்று மடங்கு அதிகளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக லஷ்கர் ஈ தொய்பா மற்றும் ஆப்கான் தலிபான் அமைப்புக்கள் காணப்படுகின்றன. தீவிரவாதிகளுக்கான புகலிடம் மற்றும் அதிக தீவிரவாத குழுக்கள் செயற்படும் நாடுகளிலும் பாகிஸ்தான் முதலிடத்திலுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.