கொழும்புக்கு அண்மித்த பகுதிகளுக்கு பொதுப்போக்குவரத்திற்காக இலகு ரக புதிய புகையிரத சேவையொன்றை அறிமுகப்படுத்த பெருமகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இச்சேவைக்காக 7 புகையிரத பாதைகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ஒரு பாதை அபிவிருத்தி பணிகள் ஜப்பான் நாட்டின் உதவியுடன் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோடி நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன. ஏனைய 6 புகையிரத பாதைகளின் நிர்மாண பணிகளை அரச மற்றும் தனியாரின் பங்களிப்புடன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 17 வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ராகமையிலிந்து கிருலப்பனை வரையும், களனியிலிருந்து மொரட்டுவை வரைக்கும், ஹூனுப்பிட்டியவிலிருந்து கொட்டாவை வரையில் புகையிரத பாதைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதன் காரணமாக கொழும்பு மற்றும் சனநெரிசல் கூடிய பிரதேசங்களில் இடம்பெறும் வாகன நெருக்கடியை இதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் மேலதிக செயலாளர் மாதவ வைத்திரத்ன தெரிவித்தார்.