வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள காணிகளை இவ்வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் மாகாண ஆளுநர்களுக்கு இதுகுறித்தான பணிப்புரையை வழங்கியுள்ளார்.