படுகொலை செய்யப்பட்ட சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் உடலை ஒப்படைக்குமாறு அவரது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார். குறித்த கொலையை ஆரம்பத்தில் மறுத்த சவூதி அரேபியா பின்னர் ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து ஜமால் கசோக்கியின் உடலை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவரின் உறவினர்கள் சவூதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவருக்கான இறுதி சடங்குகளை உரிய முறையில் நிறைவேற்றும் பொருட்டே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஜமால் கசோக்கி உயிருடன் திரும்புவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருந்தாகவும் தற்போது அது இல்லாமால் போனது கவலையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த கொலை தொடர்பில் 18 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது மாத்திரம் போதுமானதல்ல. கொலையின் பிரதான சூத்திரதாரி கைதுசெய்யப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பவேண்டுமென ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.