நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புக்கள் இன்று காலை 07.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது. இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டோர், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலங்கம பகுதியில் சுற்றிவளைப்புக்களின்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் 46 பேர் கைதுசெய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.