11 இலட்சம் ரூபாவுக்கு அதிக நிதியை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 15ம் திகதி மிஹிந்தலை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வர்த்தக நிலையத்தில் இருந்த பாதுகாப்பு கெமராவிலுள்ள காட்சிகளை கொண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வருகைத்தந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் திருடப்பட்ட பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.