அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி சுமார் 400 கைதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலையின் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.