தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வெட்டுப்புள்ளியை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையாதவர்களாக கருதப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேரந்த மாணவர்களுக்கான புலமைப் பரிசில் தொகையை வழங்குவதும் ,திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு அதிக வசதிகளைக் கொண்ட பாடசாலையில் கற்பதற்கான வாய்ப்பை வழங்குவதும் புலமைப்பரிசில் பரீட்சையின் நோக்கமாகும். அதற்கமைய வருடாந்தம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது. இதேவேளை 70 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு கடந்த 2016 ம் ஆண்டு முதல் சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.