இத்தாலிக்கு பயணிப்பதற்கு வீசா பெற்றுத்தருவதாக தெரிவித்து இளைஞர்களை திருமணம் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட யுவதியொருவர் உள்ளிட்ட சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மஹவௌ – தொடுவாவ பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது யுவதியொருவர் மற்றும் இளைஞர்கள் நால்வரை கைதுசெய்ததாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.