கலேவல பகுதியில் மாத்திரை உட்கொள்ளும் போது அது தொண்டையில் சிக்கிய நிலையில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொண்டையில் மாத்திரை சிக்கிய நிலையில் குறித்த சிறுவன் கலேவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளான். கலேவல பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார். கலேவெல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.