வறட்சி நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 30 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
எமது அரசாங்கம் பதவியேற்று வெள்ளம், வறட்சி, உட்பட உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 38 ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இதனை பற்றி யாரும் பேசுவதில்லை. எமது அரசாங்கம் மக்களுக்காக சேவையாற்றுகின்றது என குறிப்பிட்டார்.
நொச்சியாகம பிரதேச செயலகத்தில் உலர் உணவு வழங்கும் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாநு தெரிவித்தார். லிதவௌ, குசும்புற, துனுதடுவௌ மற்றும் மூதித்தாகம உள்ளிட்ட கிராமங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்;டன. அமைச்சர்களான பி.ஹரிசன், சந்ராணி பண்டார, ராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.