139வது கம் உதாவ, மாதிரி கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர, கரம்பவௌ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்திற்கு சந்தலியகம என பெயரிடப்பட்டுள்ளது. 32 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நீர், மின்சாரம், உள்வீதி, பிரவேச வீதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரத்து 500 மாதிரி கிராமங்களை அமைக்கும் இலக்கை அடைவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். வீடற்ற, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.