கம்பஹா மாவட்டம் சுற்றாடலை பொறுத்த வரையில் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்ட மென்பதால் அதனை குறைத்து மதிப்பிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கம்பஹா பண்டார நாயக்க வித்தியாலத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அப்பாடசாலை மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர். வித்தியால வளாகததிலுள்ள இராணுவ வீரர் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவ்விதித்தியாலத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஏற்பாடுசெய்துள்ள எக்ஸ்பேன் கண்காட்சியையும் பார்வையிட்டார். மாணவர்களின் திறமையை உலகத்திற்கு பறைசாற்றும் இக்கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி அம்மாணவர்களின் திறமைகளையும் பாராட்டினார்.
மாணவன் கியான் ஹெட்டியாராய்ச்சி தயாரித்த ஏவுகணை தொடர்பில் ஜனாதிபதி விசேட அவதானம் செலுத்தியதுடன் அதனை விண்ணியல் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அதற்குரிய நிதியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கூட்டத்திர் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒவ்வொரு மாணவர்களின் பிறந்த தினத்தன்றும் மரக்கன் ஒன்றை நடுவதற்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிபர்களிடம் ஆலோசனை வழங்கினார். நாளைய தினத்தில் மனிதன் உட்பட அனைத்து உயிரினிங்களின் வாழ்வாதாரம் சுற்றாடலில் தங்கியிருப்பதனால் அதனை பாதுகாப்பதற்கு அனைவரும் தமது பொறுப்புக்களை நல்க வேண்டுமென தெரிவித்தார்.