பதுளை, பூணாகலை, அம்பிட்டிகந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 157 வீடுகளை கொண்ட மாதிரி கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திற்கு இளஞ்செழியன்புரம் என பெயரிடப்பட்டுள்ளது. அங்குரார்ப்பண நிகழ்வு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. பேண்தகு யுகம் – முன்னேற்றத்திற்கு பலம், எங்கள் நிலத்தில் எங்கள் வீடு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ஹரின் பெர்ணான்டோ, மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், அரவிந்த் குமார் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.