தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் குடிபோதையில் ஒழுக்கயீனமாக நடந்துகொண்ட இளைஞர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கலேவல பிரதேசத்தை சேர்ந்த நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களை இன்றைய தினம் தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.