இலங்கை போக்குவரத்து சபையை கடன் சுமையற்ற நிறுவனமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் குறித்த சவால் வெற்றிக்கொள்ளப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாரஹேன்பிட்டவிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது 260 இலட்சம் ரூபா பெறுமதியான 5 புதிய பஸ் வண்டிகளும் ஹட்டன் டிப்போவுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.