நோர்வே மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியுள்ளார்.
டுபாயிலிருந்து வருகை தந்த ஈ கே 650 விமானம் மூலமே அவர் இன்று காலை 8.30 மணிக்கு நாடு திரும்பினார்.கடந்த 3ஆம் திகதி பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நோர்வே பயணமாகியிருந்தனர்.
முக்கிய தலைவர்களை சந்தித்த பிரதமர் முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.