சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1.73 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அது 11.6 வீத அதிகரிப்பை காட்டுவதாக சுற்றுலா அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. முதல் 9 மாதங்களில் இந்தியா, சீனா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளனர். செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளனர். அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 2.8 வீத்தினால் அதிகரித்துள்ளதாக அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.