மட்டக்குளி சமித்புர பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, நபரொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினை இக்கொலைக்கு காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர். தப்பியோடிய கொலை சந்தேக நபரை தேடி மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்