சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகள் இணையத்தளத்தினூடாக பஸ் வண்டிகளுக்கான ஆசனங்களை பதிவுசெய்ய முடியும். இது தொடர்பான வேலைத்திட்டமும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 35 வகையான தூர பயண சேவைகளுக்கான பஸ் வண்டிகளின் ஆசனங்களை பதிவுசெய்துகொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு – கதிர்காமம், யாழ்ப்பாணம் – பதுளை, அனுராதபுரம், உள்ளிட்ட பகுதிகளும் அதில் உள்ளடங்குகின்றன. பொது போக்குவரத்து சேவையில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும். டிஜிட்டல் அட்டையினூடாக ஆசனங்களுக்கான பணத்தை செலுத்தும் வசதிகளும் துரித கதியில் நடைமுறைப்படுத்தப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.