பேருவளை பன்னில 80வது ஏக்கர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரவித்துள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபரொருவர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர் வலத்தர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.