மூன்று இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ராகமையிலிருந்து, கிருலப்பனை வரையும், களனியிலிருந்து, மொரட்டுவை வரையும் மற்றும் ஹுணுப்பிட்டியவிலிருந்து, கொட்டாவை வரையும் ரயில் வீதிகள் நிர்மாணிக்கப்படும். பாதுகாப்பான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதே இதன் முதற்கட்ட நோக்கமாகும். இதனுடாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியுமென மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.