தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலமொன்று நேற்று பிற்பகல் காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் சிறுமி இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்னர் குறித்த சிறுமி காணாமல் போனமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் இந்த சிறுமியின் சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.