கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் ஹட்டன் பகுதியில் நேற்றிரவு 8.30 மணிக்கு தடம்புரண்டது.
இதனால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லையென ஹட்டன் புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.புகையிரதத்தினை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ரயில் தடம்புரண்டதன் காரணமாக மலையக புகையிரத சேவை பாதிக்கபடவில்லையெனவும் தெரிய வருகிறது.