அடுத்த வருடத்திற்கான பாடசாலை புத்தகங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் தற்போது பாடப்புத்தக விநியோக நடவடிக்கை இடம்பெற்று வருவதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாலிக்கா தெரிவித்துள்ளார். இம்முறை மாணவர்களுக்கென 414 வகையான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவ்வாறு 3 கோடி 90 இலட்சம் புத்தகப் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கென மேலதி பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாலிக்கா மேலும் தெரிவித்துள்ளார்.