ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் பங்களாதேஷ் அணி போராடி தோல்வியடைந்தது. இறுதிப்பந்து வரை விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48-3 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. தனி நபராக சிறப்பாட்டத்தை வெளிப்படுத்திய லிண்டன் தாஸ் 121 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறுகிய ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் குல்திப் யாதவ் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு 223 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 வது ஓவரின் இறுதிப்பந்தில் இலக்கை அடைந்தது. ரோஹித் ஷர்மா 48 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் முஸ்தபிஷுர் ரஹ்மான் மற்றும் ரபேல் ஹெசேன் ஆகியோர் தலா இரு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
நேற்றைய இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. இறுதி ஓவரில் 6 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, போட்டியின் இறுதிப்பந்திலேயே வெற்றியிலக்கை அடைந்தது. பங்களாதேஷ் வீரர்கள் தமது போராட்ட குணத்தை முழுமையாக வெளிப்படுத்தியிருந்தனர். இதேவேளை இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் வீரர் லிண்டன் தாஸ் தெரிவானார். தொடர் நாயகனாக இந்திய வீரர் ஷிக்கர் தவான் தெரிவானார். இதேவேளை இந்திய அணி 7வது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.