காசா எல்லையில் பலஸ்தீனியர்களை இலக்கு வைத்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இரு குழந்தைகளும் அடங்குவதாக பலஸ்தீன் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 506 பேர் காயமடைந்துள்ளனர். காசா எல்லையில் பலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.