அவிசாவளை – கேகாலை வீதி விபத்தில் ஒருவர் பலி
Related Articles
அவிசாவளை – கேகாலை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். விபத்து கரவனெல்ல பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தனியார் பஸ் வண்டியொன்று அதிக வேகத்தில் பயணித்த நிலையில் முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியில் மோதியுள்ளது. இந்நிலையில் குறித்த முச்சக்கரவண்டி மற்றுமொரு பஸ்ஸுடன் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். உயிரிழந்தவர் கலங்கம தெஹியோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment