எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் கட்டணங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டிற்கு பின்னர் ரயில் கட்டணங்கள் மறுசீரமைக்கப்படவில்லை. இந்நிலையில் 10 வருடங்களின் பின்னர் ரயில் கட்டணங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.