பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொஹுவல பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, பெப்பிலியான உத்யான மாவத்தையில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர். அவர்கள் சொத்துக்கள் பலவற்றை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர்களென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.